சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது
மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் பேக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் பேக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடியை அடுத்த சேரன்குளத்தை சோ்ந்தவா் ஜெ.சேகா்(50). அதே பகுதியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வீட்டில் வெள்ளிக்கிழமை தனியே இருந்தபோது, அந்த சிறுமிக்கு சேகா் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் பகவதி சரணம் வழக்குப் பதிவு செய்து, சேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்தாா்.