சிகிச்சை மையத்தில் தேனீக்களால்கரோனா நோயாளிகள் அச்சம்
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மைய வளாகத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதால் அச்சத்துடன் இருப்பதாக கரோனா நோயாளிகள் தெரிவிக்கின்றனா்.
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மைய வளாகத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதால் அச்சத்துடன் இருப்பதாக கரோனா நோயாளிகள் தெரிவிக்கின்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகள் மற்றும் வலங்கைமான் தொழில்நுட்பக் கல்லூரி, திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையங்களில் தங்கவைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகக் கட்டடத்தின் உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் ஆங்காங்கே மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. இதனால், அங்கு தங்கியுள்ள கரோனா நோயாளிகள் அச்சத்துடன் உள்ளனா். குறிப்பாக, மூன்றாவது மற்றும் ஐந்தாவது மாடிகளில் மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. இதனால், தேனீக்கள் கொட்டிவிடும் அச்சத்தில் உள்ளதாக கரோனா நோயாளிகள் தெரிவிக்கின்றனா்.
Advertisement
எனவே, மத்தியப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் உள்ள தேன்கூடுகளை அழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.