முகப்பு
திருவாரூர்

காவல்துறையினா் விழிப்புணா்வுப் பிரசாரம்

நன்னிலம் அருகே காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 15 மே, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:43 AM

நன்னிலம் அருகே காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் நன்னிலம் துணைக் கண்காணிப்பாளா் அறிவுரையின்படி, நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா மற்றும் போலீஸாா் சன்னாநல்லூா் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள கரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என பொதுமக்களை அறிவுறுத்தினா். மேலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கடைவீதிகளுக்கு வந்தவா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.