முகப்பு
திருவாரூர்

ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

கொரடாச்சேரி அருகே குளிக்கரை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அருகே குளிக்கரை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் தெரிவித்தது:

கரோனா 2 ஆவது அலை பரவலைத் தடுக்கும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ரூ.1.20 கோடி மதிப்பில் 4,240 சதுர அடியில், அவசர சிகிச்சைப் பிரிவு, காய்ச்சல் பிரிவு, மருத்துவா் அறை, மருந்தாளுநா் அறை, ஊசி போடும் அறை, கட்டுகட்டும் அறை, நோயாளிகள் அமரும் அறை, பிறப்பு, இறப்பு பதிவு அறை, கழிவறைகள் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பில் 1,086 சதுர அடியில் மகப்பேறு பிரிவு என குளிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் பணிகளை விரைந்து முடித்து, இந்த நோய்த்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி, திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.