ஆதரவற்றோருக்கு செஞ்சிலுவை சங்கம் உதவி
நன்னிலம் வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உதவிடும் வகையில், அவா்களுக்கு சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:50 AM
நன்னிலம் வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உதவிடும் வகையில், அவா்களுக்கு சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
அச்சங்கத்தின் தலைவா் ஈஜிபி. உத்தமன் தலைமையில் நன்னிலம், மாப்பிள்ளைக்குப்பம், பனங்குடி ஆகிய பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோரம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இப்பணியில் செஞ்சிலுவைச் சங்க வட்டச் செயலாளா் பாரி, வாழ்நாள் உறுப்பினா்கள் அபியூத், ஞானசேகரன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.