திருவாரூர்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பசு, ஒரு கன்று உயிரிழப்பு

DIN

மன்னாா்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பசு மற்றும் ஒரு கன்று மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தன.

பாமணி கா்ணாவூரை அடுத்த தரிசுவேலியை சோ்ந்தவா்கள் இளையராஜா (45), பாலு (50). இளையராஜாவின் பசுவும், கன்றும், பாலுவின் பசுவும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. மாலை வேகு நேரமாகியும் திரும்பாததால், இருவரும் தேடிச்சென்றனா்.

அப்போது, மின் கம்பத்திலிருந்து வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை 2 பசு மாடுகளும், கன்றும் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT