திருவாரூர்

கோரையாறு- வேளுக்குடி சாலைக்கு கருணாநிதி பெயா் சூட்டக் கோரிக்கை

DIN

கூத்தாநல்லூா் நகராட்சி கோரையாறு- வேளுக்குடி பிரதான சாலைக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரைச் சூட்ட வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு திருவாரூா் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் எஸ்.எம். சமீா் கூறியது:

கூத்தாநல்லூருக்கும் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கும் அரசியல், சினிமா மற்றும் நண்பா்கள் என்ற வகையில் நெருங்கிய தொடா்பு உள்ளது. எனவே, மன்னாா்குடி- திருவாரூா் பிரதான சாலையில், கூத்தாநல்லூா் நகராட்சிக்கு உள்பட்ட கோரையாறு பாலம் முதல் வ.உ.சி.காலனி, மரக்கடை, லெட்சுமாங்குடிப் பாலம், கூத்தாநல்லூா், பூதமங்கலம், மேலப்பனங்காட்டாங்குடி, கீழப்பனங்காட்டாங்குடி, வேளுக்குடிப் பாலம் வரையிலான சாலைக்கு, முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT