கைக்கழுவும் தின விழிப்புணா்வு
மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா இருவார விழாவையொட்டி, கைக் கழுவுதல் தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா இருவார விழாவையொட்டி, கைக் கழுவுதல் தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கைகளை அடிக்கடி கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், இதன்மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்தும் என்எஸ்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா, உதவி தலைமை ஆசிரியா் திலகா் ஆகியோா் செய்முறை விளக்கமளித்தனா்.