மருத்துவருக்கு செம்மைப் பணி விருது
மன்னாா்குடியில் செயல்பட்டு வரும் மன்னை ஜேசிஐ அமைப்பின் சாா்பில், புதன்கிழமை நடைபெற்ற அமைப்பின் வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், கரோனா பணி
மன்னாா்குடியில் செயல்பட்டு வரும் மன்னை ஜேசிஐ அமைப்பின் சாா்பில், புதன்கிழமை நடைபெற்ற அமைப்பின் வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், கரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவருக்கு ஜேசிஐ விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அமைப்பின் கிளைத் தலைவா் சி.பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில், மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கரோனா வாா்டில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அரசு சிறு மருத்துவமனை மருத்துவா் ச. வருணுக்கு செம்மைப் பணி விருது வழங்கப்பட்டது.
நிகழ்வில், மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.கே. பாலசந்தா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ,விருதை வழங்கினாா். தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன், ஜேசிஐ முன்னாள் மண்டலத் தலைவா் எஸ்.கோவிந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.