வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் திருவோணமங்கலம் ஊராட்சித் தலைவா் போட்டியின்றி சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இந்த ஊராட்சித் தலைவராக இருந்த சொக்கலிங்கம் அண்மையில் மரணம் அடைந்ததால், இங்கு அக்டோபா் 9ஆம் தேதி தோ்தல் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி, சொக்கலிங்கம் மனைவி மகேஸ்வரி, துரை குமரேசன், கலையரசன் ஆகிய 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், துரை குமரேசனும், கலையரசனும் தங்கள் வேட்புமனுக்களை சனிக்கிழமை திரும்ப பெற்றால், மகேஸ்வரி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.