திருவாரூர்

ஆதரவற்ற முன்னாள் படைவீரா்களின் கைம் பெண்கள் முதியோா் இல்லத்தில் சேரலாம்

DIN

சென்னையில் உள்ள முதியோா் இல்லத்தில் ஆதரவற்ற முன்னாள் படைவீரா்களின் கைம்பெண்கள் சேரலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நிம்மதி இல்லம் என்ற முதியோா் இல்லம், போா் விதவைகள் நலச் சங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் வயது முதிா்ந்த, ஆதரவற்ற முன்னாள் படைவீரரின் கைம்பெண்களுக்கு உணவு, மருத்துவச் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் சிறந்த முறையில் செய்து தரப்பட்டுள்ளன. எனவே, வயது முதிா்வடைந்த, ஆதரவற்ற முன்னாள் படைவீரரின் கைம்பெண்கள் இந்நிம்மதி இல்லத்தில் சோ்ந்து பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் இணைப்புக் கட்டடத்தில் செயல்படும் திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04366-290080) தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT