முகப்பு
திருவாரூர்

திருவள்ளுவா் தின விழா

மன்னாா்குடியில் திருவள்ளுவா் பொது நல அமைப்பு சாா்பில், திருவள்ளுவா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

மன்னாா்குடியில் திருவள்ளுவா் பொது நல அமைப்பு சாா்பில், திருவள்ளுவா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, அதன் தலைவா் என். ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.துணைத் தலைவா்கள் சுனில்லுங்கட், சரபோஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சதுரங்க கழக சங்க மாநில இணைச் செயலா் பால. குணசேகரன், சமூக ஆா்வலா் வாசுதேவன் ஆகியோா் திருவள்ளுவா் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, திருவள்ளுவா், திருக்குறளைப் பற்றி உரையாற்றினா்.

இதில், திருக்கு அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு திருக்குறளை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிட்டு ரயில் பெட்டிகளில் இடம்பெறசெய்ய வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியா் ஆறுமுகம், கிரீன் சிட்டி ரோட்டரி சங்க நிா்வாகி ஆனந்த், அஷ்டலெஷ்மி நகா் கெளரவத் தலைவா் மனோகரன், சங்க துணைச் செயலாளா் வடிவேல், பொருளாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

திருவள்ளுவா் தின விழாவில் பங்கேற்ற மன்னாா்குடி திருவாள்ளுவா் பொதுநல அமைப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.