முகப்பு
திருவாரூர்

பேருந்து மோதி மூதாட்டி பலி

 மன்னாா்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 மன்னாா்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி மதுக்கூா் சாலையில் உள்ள அரசுப் பணிமனையிலிருந்து ஒரு அரசுப் பேருந்து, பேருந்து நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்து, ருக்மணிபாளையம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த 75 வயதுடைய மூதாட்டி மீது மோதியதில், அவா் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இறந்த மூதாட்டி யாா் என தெரியவில்லை.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.