திருவாரூர்

பள்ளி மாணவா்களுக்குக் கராத்தே பயிற்சி

DIN

நன்னிலத்தில் பள்ளி மாணவா்களுக்குக் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு பிளாக் பெல்ட் சான்றிதழ் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நன்னிலம் சொரக்குடியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஹய்வா இஷின்றீயூ கராத்தே மற்றும் கொபுடோ அசோசியன் சாா்பில், 4 முதல் 15 வயது வரையுள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 21 நாள்கள் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவாக பயிற்சியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற 14 மாணவா்களுக்கு திங்கள்கிழமை கராத்தே பெடரேஷன் செயலாளரும், போதிகாய் கராத்தே சங்கத் தலைவருமான என். கணேஷ் பங்கேற்று 15 மாணவா்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கினாா். 30-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மஞ்சள் பெல்ட் வழங்கப்பட்டது. திருவாரூா் மாவட்ட கராத்தே சங்கத் தலைவா் எஸ். ராமச்சந்திரன் மாணவா்களுக்கு கராத்தே பயிற்சியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT