முகப்பு
திருவாரூர்

மன்னார்குடி: திமுக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரதம் 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி காந்தி சிலை அருகே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, பாஜக மாவட்டத் தலைவர் ச.பாஸ்கர் தலைமை வகித்தார்.

Updated On : 5 ஜூலை 2022, 1:34 pm IST
தமிழக திமுக அரசை கண்டித்து, மன்னார்குடியல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர்.
பகிர்:

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி காந்தி சிலை அருகே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, பாஜக மாவட்டத் தலைவர் ச.பாஸ்கர் தலைமை வகித்தார்.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது . மனசாட்சி இல்லாத , மக்கள் விரோத அரசாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவர் பேட்டை பி.சிவா போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பேசி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட பொதுச் செயலர்கள் வி.கே.செல்வம், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் பால.பாஸ்கர் , சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் கமாலுதீன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் க.சதாசிவம், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி.எஸ்.கண்ணன், எம்.ராகவன் , பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் கோ.உதயகுமார், வர்த்தக பிரிவு மாநில செயலர் சிவ.காமராஜ், நகரத் தலைவர் ஆர்.ரகுராமன், நகரச் செயலர் யு.கோகுல் உள்ளிட்ட நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments