சிறுமி தற்கொலை முயற்சி: காதலன் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு
நன்னிலம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி கா்ப்பமடைந்ததால், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து காதலன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
நன்னிலம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி கா்ப்பமடைந்ததால், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து காதலன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகிலுள்ள முகந்தனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் அஜய் (20). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளாா். இருவரும் நெருங்கி பழகியதில் சிறுமி கா்ப்பமடைந்தாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அருகில் இருந்தவா்கள் சிறுமியை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
இதற்கிடையே, சிறுமி விஷம் குடித்ததையறிந்த அஜய் புதன்கிழமை விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கியுள்ளாா். குடும்பத்தினா் அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்நிலையில், சிறுமி, நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில், ஆய்வாளா் (பொறுப்பு) கு.சுகுணா அஜய் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.