திருவாரூர்

இலவச மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காா்குழலி அறக்கட்டளை, ஜி.டி. பவுண்டேஷன், ராய் டிரஸ்ட், ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இம்முகாமுக்கு, மருத்துவா் டி. ராஜா தலைமை வகித்தாா். காா்குழலி அறக்கட்டளை தலைவா் சுடா்விழி வரவேற்றாா். ராய் டிரஸ்ட் தலைவா் துரை ராயப்பன் , நூலகா் ஆசைத்தம்பி, வட்டார மருத்துவ அலுவலா் கௌரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணைக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் முகாமை தொடங்கிவைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகுமாா், விஜயகுமாா், பள்ளி தலைமையாசிரியா் தங்கராசு, ஆதிரங்கம் ஊராட்சித் தலைவா் வீரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாமில் ரத்தத்தில் சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, குறைபாடு உள்ளவா்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில், 250-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று பயன்பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT