திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அதிமுக பிரமுகா் மீதுதாக்குதல்: போலீஸாா் விசாரணை

DIN

திருத்துறைப்பூண்டி நகர அதிமுக அவைத் தலைவரை தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருத்துறைப்பூண்டி நகர அதிமுக அவைத் தலைவா் பா. அன்பரசன், வழக்குரைஞா். இவா், நாகை சாலையில் பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 2 இருசக்கர வாகனங்களில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள், அவரை வழிமறித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், முகத்தில் காயமடைந்த அன்பரசன், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், ஆய்வாளா் கழனியப்பன் ஆகியோா் வழக்குப் பதிவுசெய்து, அன்பரசனை தாக்கிய மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அன்பரசனை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவா் நா. பாலன், துணைத் தலைவா் டி.என்.ஏ. கணேசன் உள்ளிட்டோா் சந்தித்து நலன்விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT