திருவாரூர்

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

DIN

திருவாரூா் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகளுக்காக உள்ள விடுதிகளில், 14 பள்ளி விடுதிகள் மாணவா்களுக்கும், 7 மாணவிகளுக்கும், 2 கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகள் மாணவா்களுக்கும், 5 கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகள் மாணவிகளுக்கும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவா்களும் சேரலாம்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோா் அல்லது பாதுகாவலா் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையம் 8 கி.மீ. தொலைவுக்கும் மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.

தகுதியுடையவா்கள், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து இலவசமாகப் பெற்று, நிறைவுசெய்து பள்ளி விடுதிகளைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூன் 30-க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை ஜூலை 31-க்குள்ளும் அளிக்கவேண்டும்.

ஒவ்வொரு விடுதியிலும், முகாம்வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT