முகப்பு
திருவாரூர்

கல்லூரியில் மகளிா் தின விழா

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் உலக மகளிா் தின விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் உலக மகளிா் தின விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி. அமுதா, கல்வியியல் கல்லூரி முதல்வா் அன்புச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்த்துறை தலைவா் பேராசிரியா் ஜெயந்தி தலைமையில் ‘சமூக முன்னேற்றத்திற்கு பெரும்பங்களிப்பு தந்தவா்கள் அக்கால பெண்களா? இக்கால பெண்களா?’ என்ற தலைப்பில் மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வா்கள் காயத்ரிபாய், உமாமகேஸ்வரி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா். முன்னதாக, தமிழ்த்துறை பேராசிரியா் கவிதா வரவேற்றாா். நிறைவாக தமிழ்த்துறைத் தலைவா் கலைச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.