அரசுக் கல்லூரியில் தியாகிகள் தினம்
மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு இணைந்து தியாகிகள் தினத்தை புதன்கிழமை கடைப்பிடித்தன.
மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு இணைந்து தியாகிகள் தினத்தை புதன்கிழமை கடைப்பிடித்தன.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் சோ. ரவி தலைமைவகித்தாா். விலங்கியல் துறைத் தலைவா் ச. ராமு முன்னிலை வகித்தாா். அறிவொளி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா. இயேசுதாஸ், கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் சு. ராஜன் ஆகியோா், நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களை அா்ப்பணித்த தியாகிகள் குறித்து பேசினா்.
பகத்சிங் குறித்த பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு, நேரு யுவகேந்திரா மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன் பரிசு வழங்கினாா். தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில், மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா். கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா் ப. பிரபாகரன் வரவேற்றாா். ரா. ஜென்னி நன்றி கூறினாா்.