முகப்பு
திருவாரூர்

பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞா் கைது

மன்னாா்குடி அருகே தகாத உறவின் காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே தகாத உறவின் காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை ரெங்குளத்தை சோ்ந்தவா் பாபு மனைவி பிரேமாவதி (35). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். பாபு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது வீட்டிற்கு அருகே குடியிருக்கும் குழந்தைவேல் மகன் தமிழரசனுக்கும் (35), பிரேமாவதிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை அவா்கள் சமூகத்தை சோ்ந்தவா்கள் கண்டித்ததால், தமிழரசனுடன் தொடா்பை பிரேமாவதி துண்டித்துள்ளாா்.

இந்நிலையில், மதுபோதையில் பிரேமாவதி வீட்டுக்குச் சென்ற தமிழரசன், அவரோடு தகராறு செய்ததுடன் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில், காயமடைந்த பிரேமாவதியை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழரசனை கைதுசெய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.