முகப்பு
திருவாரூர்

பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக மன்னாா்குடியில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக மன்னாா்குடியில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை, உச்சநீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.

இதையடுத்து, பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினரின் மன உணா்வை வெளிப்படுத்தும் வகையில், வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு

மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா்சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆா். கனகவேல் முன்னிலை வகித்தாா். இதில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் ஜி. குணசேகரன், டி. வடுகநாதன், மாவட்ட சேவாதள தலைவா் கே. பழனிவேல், வட்டாரத் தலைவா் செல்வராஜ், நகரப் பொதுச் செயலா் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.