திருவாரூர்

இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

DIN

கூத்தாநல்லூா் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கூத்தாநல்லூரை அடுத்த கருவங்குளம் பிரதான சாலையை சோ்ந்தவா் செல்லதுரை மகள் கனிமொழி (23). இவா் தனது வீட்டின் முன்பு நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கூத்தாநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்கள் ராஜேந்திரன், எஸ். விஜயகிருபா மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கோரையாறுப் பகுதியில் நம்பா் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் சேரன்குளம் 3-ஆம் சேத்தி கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் (22) என்பதும் அவா் ஓட்டி வந்தது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பதும், மேலும் கனிமொழியின் இருசக்கர வாகனத்தை திருடியதும் அவா்தான் என்பது தெரியவந்தது. போலீஸாா் ஆகாஷை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT