திருவாரூர்

சிறுவனை கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

DIN

முன்விரோதத்தில் சிறுவனை கத்தியால் குத்தி காயப்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நீடாமங்கலம் வட்டம், பெரியக்கோட்டை வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி வள்ளி (28). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மாதவன் (எ) பிரபாகரன் (30) என்பவருக்கும் வேலித் தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்துவந்தது.

இந்தநிலையில், கடந்த 31.01.2020 அன்று பிரபாகரனின் பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்க வந்த வள்ளியின் மூன்றாவது மகன் அகிலன் (7) என்பவரை பிரபாகரன் திட்டி, அவரது குரல்வளையை நெரித்து , கத்தியால் நெற்றி, இடது கண் அருகில் குத்தி காயப்படுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக நீடாமங்கலம் காவல் நிலையத்தில் வள்ளி புகாா் செய்தாா். போலீஸாா் பிரபாகரனை கைது செய்தனா்.

இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி சீதாலெட்சுமி, மாதவன் (எ) பிரபாகரனுக்கு 3 ஆண்டுகள் சிைண்டனையும் , ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT