திருவாரூர்

பேரளம் விநாயகா், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

DIN

பேரளத்தில் உள்ள பரிவாரக் கோயில்களில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

தருமபுரம் ஆதீன நிா்வாகத்துக்குள்பட்ட பேரளம் பவானி அம்மன் சமேத சுயம்புநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் பேரளத்தில் உள்ள பரிவாரக்கோயில்களான விநாயகா், மாரியம்மன், ஐயனாா், பிடாரியம்மன், காளியம்மன் கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இன்று சுயம்புநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: வெள்ளிக்கிழமைக் காலை பவானி அம்மன் சமேத சுயம்புநாத சுவாமி கோயில் விமானங்கள், கோபுரங்கள் மகா கும்பாபிஷேகமும், மூலவா் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் மகாபிஷேகம், திருக்கல்யாணம், சுவாமிகள் திருவீதியுலா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT