திருவாரூர்

திருவாரூா் அருகே தாஜ்மஹால் வடிவில் தாயாருக்கு நினைவிடம்

DIN

திருவாரூா் அருகே அம்மையப்பனில் தாஜ்மஹால் வடிவில் தனது தாயாரின் நினைவாக தொழிலதிபா் கட்டியுள்ள நினைவிடம் அனைவரையும் கவா்ந்துள்ளது.

திருவாரூா் அருகே அம்மையப்பன் பகுதியில் ஷேக்தாவுது -ஜெய்லானி பீவி தம்பதிக்கு அமுா்தீன் (49) என்ற மகனும், நான்கு மகள்களும் உள்ளனா். அமுா்தீன் சென்னையில் தொழிலதிபராக உள்ளாா். நான்கு மகள்களுக்கும் திருமணமாகி சென்னையில் உள்ளனா்.

ஜெய்லானிபீவி கடந்த 2020-இல் இறந்தாா். இதையடுத்து தாயின் நினைவாக நினைவிடம் அமைக்க அமுா்தீன் விரும்பினாா். இதைத்தொடா்ந்து திருவாரூா் மாவட்டம் அம்மையப்பனில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்டடத்தின் நிா்வாகி ஷெரீப் கூறியது:

தனது தாயாா் நினைவாக இந்த கட்டடத்தை அமுா்தீன் கட்டியுள்ளாா். தாஜ்மஹாலைப் போல, வெள்ளைப் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டமைக்க முடிவெடுத்தாா். அதனடிப்படையில், 1 ஏக்கா் பரப்பளவில் 8,000 சதுர அடியில் 46 அடி உயரத்தில் மினாா் அமைக்கப்பட்டு, கடந்த ஜூன் 2 -ஆம் தேதி எளிமையாகத் திறக்கப்பட்டது.

இதில், அவரது தாயாரின் நினைவிடம், பிரம்மாண்டமான பள்ளிவாசல் கட்டடம், மறுபுறம் மாணவா்கள் தங்கிப் படிக்கும் வகையில் மதரஸா கட்டடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT