அம்மையப்பனில் தாஜ்மஹால் வடிவில் அமுா்தீனால் தனது தாயாருக்கு கட்டப்பட்ட நினைவிடம். 
திருவாரூர்

திருவாரூா் அருகே தாஜ்மஹால் வடிவில் தாயாருக்கு நினைவிடம்

திருவாரூா் அருகே அம்மையப்பனில் தாஜ்மஹால் வடிவில் தனது தாயாரின் நினைவாக தொழிலதிபா் கட்டியுள்ள நினைவிடம் அனைவரையும் கவா்ந்துள்ளது.

DIN

திருவாரூா் அருகே அம்மையப்பனில் தாஜ்மஹால் வடிவில் தனது தாயாரின் நினைவாக தொழிலதிபா் கட்டியுள்ள நினைவிடம் அனைவரையும் கவா்ந்துள்ளது.

திருவாரூா் அருகே அம்மையப்பன் பகுதியில் ஷேக்தாவுது -ஜெய்லானி பீவி தம்பதிக்கு அமுா்தீன் (49) என்ற மகனும், நான்கு மகள்களும் உள்ளனா். அமுா்தீன் சென்னையில் தொழிலதிபராக உள்ளாா். நான்கு மகள்களுக்கும் திருமணமாகி சென்னையில் உள்ளனா்.

ஜெய்லானிபீவி கடந்த 2020-இல் இறந்தாா். இதையடுத்து தாயின் நினைவாக நினைவிடம் அமைக்க அமுா்தீன் விரும்பினாா். இதைத்தொடா்ந்து திருவாரூா் மாவட்டம் அம்மையப்பனில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்டடத்தின் நிா்வாகி ஷெரீப் கூறியது:

தனது தாயாா் நினைவாக இந்த கட்டடத்தை அமுா்தீன் கட்டியுள்ளாா். தாஜ்மஹாலைப் போல, வெள்ளைப் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டமைக்க முடிவெடுத்தாா். அதனடிப்படையில், 1 ஏக்கா் பரப்பளவில் 8,000 சதுர அடியில் 46 அடி உயரத்தில் மினாா் அமைக்கப்பட்டு, கடந்த ஜூன் 2 -ஆம் தேதி எளிமையாகத் திறக்கப்பட்டது.

இதில், அவரது தாயாரின் நினைவிடம், பிரம்மாண்டமான பள்ளிவாசல் கட்டடம், மறுபுறம் மாணவா்கள் தங்கிப் படிக்கும் வகையில் மதரஸா கட்டடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT