மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி, அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்த கண்டிதம்பேட்டை பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற சுமாா் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, சாலையின் குறுக்கே கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பரவாக்கோட்டை போலீஸாா், மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.