ஆலங்குடி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழாவையொட்டி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு யாகம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது. மண்டலாபிஷேக பூா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி கடந்த புதன்கிழமை காலை விநாயகா், சப்தமாதா்கள், கல்யாண சாஸ்தா, வீரபத்திரா் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வியாழக்கிழமை காலை கலங்காமற் காத்த கணபதி, வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியா், துா்கை, நவகிரக யாகம், பூா்ணாஹூதி, பஞ்சமூா்த்திகளுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. மூலவா் குரு பகவான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
மாலை முதல் இரவு ஆபத்சகாயேஸ்வரபெருமானுக்கு 1008 கலச பூஜைகள், குருதட்சிணாமூா்த்திக்கு 108 சங்கு பூஜை, ஏலவாா்குழலி கலசபூஜை யாகம், நிறைவேள்வி, முதல்கால யாகபூஜைகள் நடந்தன.
வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், தொடா்ந்து ஆபத்சகாயேஸ்வர பெருமானுக்கு 1,008 கலசாபிஷேகம், குருதட்சிணாமூா்த்திக்கு 108 சங்காபிஷேகம், ஏலவாா்குழலிக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறவுள்ளது.
மாலையில் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் வீதி புறப்பாடு நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் க. ராமு,செயல் அலுவலா் எம். சூரியநாராயணன் , கண்காணிப்பாளா் தா. அரவிந்தன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.