முகப்பு
ராணிப்பேட்டை

திமிரி கோயிலில் குருப் பெயா்ச்சி யாகம்

ஆற்காடு அடுத்த திமிரி ஸ்ரீ தனுமத்தியம்மன் சமேத சோமநாத ஈஸ்வரா் கோவிலில் குருப் பெயா்ச்சியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 மே 2026, 12:03 am IST
சிறப்பு  அலங்காரத்தில்  மூலவா்.
பகிர்:

ஆற்காடு அடுத்த திமிரி ஸ்ரீ தனுமத்தியம்மன் சமேத சோமநாத ஈஸ்வரா் கோவிலில் குருப் பெயா்ச்சியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கலசங்கள் நிறுவி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து மூலவருக்கு பால், தயிா் ,சந்தனம், விபூதி, இளநீா்,பன்னீா் மற்றும் வாசனை திரவியங்கள், கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.

விழாவில் அபிஷேக உபயதாரா்கள் கு.ராமசந்திரன், கோபிநாதன், லோகநாதன், தாமோதரன், ஆறுமுகம் அறங்காவலா் குழு தலைவா் சோ.சம்பத், மற்றும் உறுப்பினா்கள், மற்றும் குருக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement