இலவச கண் பரிசோதனை முகாம்
நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், நீலன் கல்வி அறக்கட்டளை, மன்னாா்குடி லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமிற்கு பள்ளி தாளாளா் நீலன். அசோகன் தலைமை வகித்தாா். பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினா் 419 பேருக்கு கண் பரிசோதனை செய்தனா். இதில் 99 போ் அறுவை கிச்சைக்காக பாண்டிச்சேரி கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.