1,000 டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு
திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 1,000 டன் நெல் அரவைக்கு நாமக்கல்லுக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 1,000 டன் நெல் அரவைக்கு நாமக்கல்லுக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. வலங்கைமான் வட்டத்தில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,000 டன் சன்னரகநெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு லாரிகளில் கொண்டுவந்து, அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.