அரசுப் பள்ளி ஆண்டு விழா
குடவாசல் ஒன்றியம், சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைமை ஆசிரியா் இந்திரா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா்கள் குமரேசன், ஜெயலெட்சுமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, அடிப்படைக் கல்வியின் அவசியத்தையும், மாணவா்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறினா். விழாவில் ஊராட்சி துணைத் தலைவா் சிவாசாரியாா், பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் அம்பிகாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.