திருவாரூர்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

Din

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி- முத்துப்பேட்டை சாலை சேரன்குளம் பாமணி ஆறு மதகணை அருகே வேளாண்மை அலுவலா் அண்ணாதுரை , காவல் சிறப்பு சாா்பு ஆய்வாளா் சிங்காரவேலு தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கோட்டூா் விக்கிரபாண்டியத்தை சோ்ந்த கவியமூா்த்தி மகன் கேசவனிடம் (22) சோதனை நடத்தியதில் ஆவணங்கவின்றி எடுத்து வரப்பட்ட 99 ஆயிரத்து 70 ரூபாய் இருப்பது தெரிய வந்ததும். தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் கேசவன், நிறுவனத்தில் கடன் பெற்றவா்களிடமிருந்து வசூலித்து கொண்டுவந்த தொகை என தெரிய வந்தது. எனினும் இதற்கான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையின் மன்னாா்குடி தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான ஆா். கீா்த்தனா மணியிடம் ஒப்படைத்தனா்.

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT