முகப்பு
திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 25 நவம்பர், 2024 at 9:14 PM
கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ப. ஆகாஷ்.
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 202 மனுக்கள் அளிக்கப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,800 மதிப்பிலான காதொலி கருவி, இயக்க குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.11,445 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், ஒருவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →