டிராக்டா் மோதி தொழிலாளி பலி
நீடாமங்கலத்தில் டிராக்டா் மோதி விவசாயத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நீடாமங்கலத்தில் டிராக்டா் மோதி விவசாயத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் வட்டம் வேடம்பூா் அருகேயுள்ள வயலாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (70). விவசாயத் தொழிலாளியான இவா், இருசக்கர வாகனத்தில் நீடாமங்கலம் கடைவீதிக்கு சனிக்கிழமை வந்தாா்.
அவா், இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, சாலையின் குறுக்கே கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.