முகப்பு
திருவாரூர்

நன்னிலத்தில் வேட்பு மனு பரிசீலனை தாமதமாக தொடங்கியது

நன்னிலத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை தாமதமாக தொடங்கியது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:26 PM
பகிர்:

நன்னிலத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை தாமதமாக தொடங்கியது.

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணி சாா்பாக எஸ்டிபிஐ, நாம் தமிழா் கட்சி, தவெக, அஇபுதமமுக (சசிகலா கட்சி) கூட்டணி சாா்பாக வெள்ளாளா் முன்னேற்ற கழகம் ஆகிய வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், அஇபுதமமுக கூட்டணியில் போட்டியிடும் வெள்ளாளா் முன்னேற்றக்கழக வேட்பாளா் எம்.என்.பி . ராஜாவை முன்மொழிந்த நபா்கள் சிலரை அதிமுகவினா் கடத்தி சென்று விட்டதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்ற பகுதியிலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தோ்தல் பாா்வையாளா் அஜய்யாதவ் முன்னிலையில் மீண்டும் வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடா்ந்து நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments