முகப்பு
திருவாரூர்

ஆவின் பாலகம் திறப்பு

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 4:25 AM
முதல் விற்பனையை தொடங்கிவைக்கும், மன்னாா்குடி சரக கூட்டுறவு துணைப் பதிவாளா் பிரபா.
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:13 PM

மன்னாா்குடி வேளாண் விளைப்பொருள்கள் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில், ஆவின் பால் விற்பனையகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி கீழராஜவீதியில் உள்ள வேளாண் விளைப்பொருள் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகத்தில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையகம் அமைக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடி சரக கூட்டுறவு துணைப் பதிவாளா் பிரபா, ஆவின் பாலகத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

Advertisement

வேளாண் விளைப்பொருள் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் அருள்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.