வலங்கைமான் புறவழிச்சாலை பணி தொடக்கம்
வலங்கைமானில் புறவழிச்சாலைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வலங்கைமானில் புறவழிச்சாலைப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வலங்கைமான் நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது மட்டுமின்றி குறிப்பிட்ட இடத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. தமிழக அரசால் 73. 29 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு பணி வெள்ளிக்கிழமை நாகை எம்பி வை. செல்வராஜ், திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.