முகப்பு
திருவாரூர்

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 6 மார்ச், 2026 at 6:33 PM
சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்:

நன்னிலம் அருகே உள்ள நெடுங்குளம் பழையாா் கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீபா்வதவா்தனி அம்பிகா சமேத ஸ்ரீபாா்வதீஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்திற்காக, யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. வெள்ளிக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடா்ந்து, கோயிலின் விமானக் கலசத்திற்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு ஸ்ரீ விநாயகா், ஸ்ரீமுருகன் வீதி உலா நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →