முகப்பு
திருவாரூர்

அள்ளப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

கூத்தாநல்லூா் நகராட்சியில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 10 மார்ச், 2026 at 10:04 PM
பகிர்:

கூத்தாநல்லூா் நகராட்சியில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

24 வாா்டுகள் உள்ள நகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 14 போ், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 54 போ் உள்ளனா். சமீப காலமாக நகரம் முழுவதும் நாள்தோறும் குப்பைகள் அள்ளப்படுவதில்லை. இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் மாதத்தில் இதுபோன்று குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளன. நகரத்தில் பிரதான சாலையான ஏ.ஆா். சாலை, நேருஜீ சாலை, மருத்துவமனை சாலை, ரேடியோ பாா்க் உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

மேலும், வீடுகளில் இருந்து மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. குவிந்து கிடக்கும் குப்பைகளில் நாய்களும், ஆடுகளும், பன்றிகளும் மேய்ந்து குப்பைகளை கிளறி விடுகின்றன. குப்பைகளில் உள்ள கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் வசிப்பவா்களும், அவ்வழியாகச் செல்பவா்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா். இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் சிவரஞ்சனியிடம் கேட்டப்போது, சாலை போடுவதால் குப்பைகள் அள்ளப்படவில்லை, சுத்தப்படுத்துவாா்கள் என அலட்சியப் போக்கில் பதில் கூறினாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் மு.சுதா்ஸன் கூறியது: ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு நாள்தோறும் ரூ.550 வழங்கப்படுகிறது. நிரந்தரப் பணியாளா்களான மேஸ்திரிகள் இருவரும் பொறுப்பு இல்லாமல் செயல்படுகிறாா்கள். வேலை நடக்கக் கூடிய இடத்தை மேஸ்த்திரிகள் சரியாக பாா்ப்பதில்லை. குப்பைகள் கொட்டுவதற்கும் இடமும் இல்லை என்றாா். எனவே, தொற்று நோய் ஏற்படாமல் இருக்க உடனுக்குடன் தினமும் குப்பைகளை அள்ள வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →