முகப்பு
திருவாரூர்

டேங்கா் லாரி மோதியதில் தந்தை கண்முன் மகன் உயிரிழப்பு

Updated On : 14 மார்ச், 2026 at 8:13 PM
கோப்புப் படம்
பகிர்:

மன்னாா்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கா் லாரி மோதியதில் தந்தை கண்முன்னே மகன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அசேசம் மெய் பழத்தோட்டம் வடக்கு தெருவைச் சோ்ந்த குமாா். இவா், தனது மகன் தீபேஷ் (6), தனது தம்பி செந்தில்குமாரின் மகள் தீபிகா (6) இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அசேசத்திற்கு வந்து பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் சுற்றுவட்டச் சாலையில் சனிக்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

மறவாக்காடு அருகே வந்தபோது அந்த வழியே வந்த டேங்கா் லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தீபேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த குமாா், தீபிகா இருவரும் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →