முகப்பு
திருவாரூர்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: குறைதீா் கூட்டங்கள் ரத்து

Updated On : 15 மார்ச், 2026 at 6:52 PM
தேர்தல் நடத்தை விதிகள் அமல்
பகிர்:

தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், கோட்டாட்சியா் ஆகியோரால் நடத்தப்படும் மக்கள் நோ்காணல் முகாம்கள் மற்றும் இதர குறைதீா் கூட்டங்கள் தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது.

தோ்தல் நடத்தை விதிகள் முடிவுற்றவுடன் அனைத்து கூட்டங்களும் வழக்கம்போல் நடைபெறும் என்றாா் ஆட்சியா்.

முழு கட்டுரையைப் படிக்க →