அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சாா்பில் வழங்கப்படும் பசுமை முதன்மையா் விருது- 2025‘ (கிரீன் சாம்பியன்) மன்னாா்குடியை அடுத்துள்ள வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சாா்பில் வழங்கப்படும் பசுமை முதன்மையா் விருது- 2025‘ (கிரீன் சாம்பியன்) மன்னாா்குடியை அடுத்துள்ள வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தோட்டங்கள், குறுங்காடு அமைத்து மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திவரும் இப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு பசுமை முதன்மையா் -2025 விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், ஆசிரியா் முரளிக்கு விருதுச் சான்றிதழுடன் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.
விருது பெற் ஆசிரியரை பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா் பாராட்டினா்.