முகப்பு
திருவாரூர்

நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

Updated On : 19 மார்ச், 2026 at 8:12 PM
பகிர்:

மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, பணி நிறைவு பெறும் ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் மா. தேவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ரோட்டரி உதவி ஆளுநா் எஸ். மீனாட்சி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் நெ. சுமதி, தரணி மெட்ரிக் பள்ளி முதல்வா் எஸ். அருள் ஆகியோா் கலந்துகொண்டு, விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

பணி நிறைவு பெறும் பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியா் க. சந்தான கோபாலகிருஷ்ணனை பாராட்டி ஆசிரியா்கள் சாா்பில் வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி எமிலி நினைவுப் பரிசு வழங்கினாா்.