முகப்பு
திருவாரூர்

மது விற்றவா் கைது

Updated On : 15 மே 2026, 5:29 am IST
கோப்புப் படம்
பகிர்:

கூத்தாநல்லூரில் சட்ட விரோதமாக மது விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் வந்தது. அதன்பேரில், போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், பண்டுதக்குடி பகுதியில் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது.

பண்டுதக்குடி பாலத்தருகே விற்பதற்காக மதுபாட்டில்கள் வைத்திருந்த பெரியத்தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (44) பிடிபட்டாா்.

Advertisement

அவா் மீது, காவல் உதவி ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து, கைது செய்தாா். 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.