முகப்பு
புதுதில்லி

நாளை ஜாமியாபல்கலைக்கழக விடுதி அடிக்கல் நாட்டு விழா

தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மகளிர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை (மே 14) நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறா

Updated On : 13 மே 2013, 12:53 am IST
பகிர்:

தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மகளிர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை (மே 14) நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார்.

இது தொடர்பாக ஜாமியா பல்கலைக்கழகத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சிமி மல்ஹோத்ரா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ""விடுதி கட்டுவதற்கு ரூ. 26 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணிக்கு நடைபெற உள்ள அடிக்கல் நாட்டு விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா பேசுகிறார்.

Advertisement

Advertisement

இந்த விடுதியில் 400 மாணவிகள் தங்க முடியும். இங்கு உடற்பயிற்சி மையம், உணவுக்கூடம், அரங்கம் உள்ளிட்டவையும் கட்டப்படும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.