நொய்டாவில் கொள்ளையைத் தடுக்க முயன்ற இனிப்பு கடை பணியாளரை கொள்ளையர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
நொய்டா செக்டார் 18-இல் உள்ள மின் நிலையம் அருகில் புதன்கிழமை இரவு, அப்பகுதியில் இனிப்புகடையில் பணியாற்றும் அப்சல் என்பவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அப்சலை தாக்கி, அவரிடம் இருந்த செல்லிடப்பேசி, பர்ஸ் ஆகியவற்றைப் பறித்தனர். இதைத் தடுக்க முயன்ற அப்சலை அந்தக் கும்பல் கத்தியால் தாக்கியுள்ளது. காயமடைந்த அப்சல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.