புதுதில்லி

கோகுலாஷ்டமி: பிரதமர் வாழ்த்து

DIN


கோகுலாஷ்டமி பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 
கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகை வட மாநிலங்களில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நாட்டு மக்கள் அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால் மக்கள் அனைவரும் ஆரோக்கியமான உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!  என்று தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக அபுதாபி சென்றுள்ள மோடி, அங்கிருந்து சுட்டுரை மூலமாக அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT