புதுதில்லி

டிடிஇஏ பள்ளிகளில் உலக நுகர்வோர் உரிமை தின விழா

DIN

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் உலக நுகர்வோர் உரிமை தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
1963 ஆம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 
நுகர்வோர் பாதுகாப்பு பற்றியும் உரிமைகள் பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இத்தினத்தை தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் கொண்டாடும்படி அதன் செயலர் ஆர். ராஜு கூறியதற்கு ஏற்ப, டிடிஇஏ பள்ளிகளில் வெள்ளிக்கிழமை  இத் தினம் கொண்டாடப்பட்டது.
இத்தினம் குறித்தும், நுகர்வோர் உரிமைகள் குறித்தும் மாணவர்கள் உரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட  குழந்தைகள் அனைவரையும் டிடிஇஏ செயலர் ஆர்.ராஜு  பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT